ஆசியா

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவு : 14 பேர் உயிரிழப்பு!

  • June 4, 2023
  • 0 Comments

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. வனத்துறை அலுவலக கட்டப்பகுதியில் ஏற்பட்ட குறித்த நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 5 பேரைக் காணவில்லை என்றும் அறவிக்கப்பட்டுள்ளது.  அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும். தொலைதூர மற்றும் […]

பொழுதுபோக்கு

அனைத்தையும் முறியடித்து முதல் தமிழ் படமாக சாதனை படைத்தது “லியோ”…

  • June 4, 2023
  • 0 Comments

விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும், இதற்காக விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்துள்ளார். படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன, எனவே தயாரிப்பாளர்கள் படத்தின் வியாபாரத்தை திறந்து வைத்துள்ளனர். ‘லியோ’ படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரளா திரையரங்க விநியோக உரிமைகள் விற்கப்பட்டதாகவும், படம் முறையே ரூ.60 கோடி மற்றும் ரூ.16 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, கேரளாவில் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரத்தை ‘லியோ’ முறியடித்து அதிக […]

இந்தியா தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து : தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என உதயநிதி தெரிவிப்பு!

  • June 4, 2023
  • 0 Comments

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில்,  தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்திருந்தது. அத்துடன் 8 பேர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்கள் குறித்த தகவல்களை மக்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீப்பதற்காக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட குழுவினர் ஒடிசா சென்றிருந்த நிலையில், தற்போது தமிழகம் திரும்பியுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  […]

ஆசியா

கனமழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஜப்பானின் சாலைகள்

  • June 4, 2023
  • 0 Comments

ஜப்பானில் 3 நாட்களாக பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பமண்டல புயலான மார்வார் நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவால் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் […]

ஐரோப்பா

இங்கிலாந்தை ஆற்றல் மிக்க வல்லரசாக மாற்ற புதிய திட்டங்களை அறிவித்தது தொழிற்கட்சி!

  • June 4, 2023
  • 0 Comments

இங்கிலாந்தை ஆற்றல் மிக்க வல்லரசாக மாற்றும் திட்டங்களை தொழிற்சட்சி அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த ஏழு ஆண்டுகளில் அரை மில்லியன் வேலைகளை உருவாக்க நோக்காக கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2 இலட்சம் நேரடி வேலைகள் மற்றும் 3 இலட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இந்தத் திட்டம் “திட்டமிடல் அமைப்பில் உள்ள தொகுதிகள் முதல் தேசிய துறைமுக உள்கட்டமைப்பில் முதலீடுகளை புறக்கணிப்பது வரை கன்சர்வேடிவ்களால் வகுக்கப்பட்ட  அதிகாரத்திற்கான தடைகளை உடைத்துவிடும் என தொழிற்கட்சி கூறியுள்ளது.

ஐரோப்பா

ரஷ்யாவின் பெல்கோர்ட் பகுதியில் இருந்து 4000 பேர் வெளியேற்றம்!

  • June 4, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பெல்கோர்ட்  எல்லைப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கிருந்து 4000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள்  தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெல்கோரோடில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 600 குழந்தைகள் உள்ளதாக ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறியுள்ளார். ரஷ்யாவின் பெல்கோர்ட்  பகுதியில், ரஷ்ய சுதந்திர போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, உக்ரைன் மீது குற்றம் சுமத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

கனடாவில் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடிக்கச் சென்ற சிறார்களுக்கு நேர்ந்த கதி

  • June 4, 2023
  • 0 Comments

கனடாவில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதில் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் ஐந்து பேர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர்.இவ்வாறு காணாமல் போயிருந்த சிறுவர்களில் நான்கு பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.எனினும் அந்த நான்கு பேரும் உயிரிழந்து […]

ஐரோப்பா

ரஷ்யா எதிர்கால அறிஞர்கள், கலைஞர்களை அழித்துள்ளது : போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து செலன்ஸ்கி உருக்கம்!

  • June 4, 2023
  • 0 Comments

டினிப்ரோவில் நடத்தப்பட்ட செல் தாக்குதலில் லிசா என்ற பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து புள்ளிவிபர தகவல்களை உக்ரைன் அதிபர் செலன்ஷ்கி வெளியிட்டுள்ளார். இதன்படி உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் இதுவரை 500 குழந்தைகள் பலியாகியுள்ளதாக செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா எதிர்கால அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு சாம்பியன்களின்” உயிரைப் பறித்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ரஷ்ய ஆயுதங்கள்  ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது”, எனவும்,  தொடர்ந்து […]

இலங்கை

இலங்கையில் குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய் குறித்து எச்சரிக்கை!

  • June 4, 2023
  • 0 Comments

சமீபகாலமாக குழந்தைகளிடம் தோல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக கூறினார். இது குழந்தைகளுக்கு கடுமையான நீரழிவை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர்,   பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

  • June 4, 2023
  • 0 Comments

பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவது தொடர்பான இலங்கையின் அடுத்த அணுகுமுறை விரைவில் தொடங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான இலகுவான தரப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார். அவ்வாறு செய்யத் தவறினால், மூலோபாய குறைபாடுகள் உள்ள நாடாக இலங்கை பட்டியலிடப்படும் அபாயம் உள்ளதாகவும், அது நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான பாதிப்பை […]