ஐரோப்பா செய்தி

பொதுத் தேர்தல் உக்ரைனை அழித்து விடும் – ஜெலென்ஸ்கி

  • August 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடனான போர் தொடரும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது, உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை “அழித்துவிடும்” என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இந்த வகையான போரின்போது தேர்தல்களை நோக்கி நகரலாம் என்று நான் நம்புகிறேன்,” என்றார். இதற்கிடையே போர்க்காலத்தில் தேர்தல்கள் நடத்துவது உக்ரைனிய சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. ஜெலென்ஸ்கியின் ஏற்பு விகிதம் […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு, 21 பேர் கவலைக்கிடம்

  • August 21, 2026
  • 0 Comments

மத்திய உக்ரைன் நகரமான கிரிவி ரிஹ்-இல் உள்ள வணிக வளாகம் ஒன்றின்மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 06 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர். ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் பகல் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா Oleksandr Hanzha தெரிவித்துள்ளார். “ஒரு குழந்தை உட்பட இருபத்தொரு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்,” என்றும்  அவர் கூறினார். தாக்குதல் தொடர்பில் […]

ஐரோப்பா

குளிர்காலத்தை கடக்க பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை கோருகிறார் ஜெலென்ஸ்கி

  • August 13, 2026
  • 0 Comments

குளிர்காலத்தில் ரஷ்யா தீவிரமான தாக்குதல்களை முன்னெடுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்குமாறு உக்ரைன் கோரியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, குளிர்காலத்தைக் கடப்பதற்கு அமெரிக்காவின் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளில் ஐந்து சதவீதமும், ரஷ்யாவின் அனைத்து பாலிஸ்டிக் எறிகணைகளையும் அழிப்பதற்கு 10 சதவீதமும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா சமீபகாலமாக, உக்ரைனின் தலைநகரான கீவ் மீது வாரத்திற்கு ஒருமுறை எனத் தொடர்ச்சியாகப் பெரும் தாக்குதல்களை நடத்தி […]

ஐரோப்பா

போர் முனையில் 50,000 வடகொரிய வீரர்கள் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

  • August 9, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்காகப் போரிட, 50,000 வரையிலான வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் நிலைநிறுத்தப்படுவார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “ரஷ்யாவின் எல்லைக்குள் 30,000 முதல் 50,000 வரையிலான வட கொரியர்களை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதத்தில் 30000 வடகொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படுவார்கள் என மதிப்பிட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கையைவிட தற்போது அதிகளவிலான வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். (இந்தத் தகவலை அவர் எவ்வாறு பெற்றார் […]

உலகம்

பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

  • July 24, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி வரும் 28 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வொஷிங்டனில்  சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாவில்லை. மத்தியக்கிழக்கில் அதிகரித்து வருகின்ற பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப்  ஜெலன்ஸ்கியை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைனின் மேம்படுத்தப்பட்ட ட்ரோன்களை காணப்படுகின்ற நிலையில், அவற்றை அமெரிக்க பெறுவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படலாம் எனவும் […]

ஐரோப்பா

நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு : முதல் முறையாக புட்டினுக்கு கடிதம் அனுப்பிய ஜெலென்ஸ்கி!

  • June 5, 2026
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பில் ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டுமானால் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த வழி என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதிய அவர்,நேரடி சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2022-ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைன் ஜனாதிபதி புட்டினுக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியது இதுவே முதல் முறை. இப்போது தேர்வு உங்களுடையது. போர் போதும். இந்தப் […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை : பெலாரஸுக்கு அணுவாயுதங்களை மாற்றும் ரஷ்யா!!

  • May 21, 2026
  • 0 Comments

ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுடன் மூன்று நாள் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யா அணு ஆயுதங்களை அங்குள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் இரகசிய நகர்வுகளை சோதிக்கும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்தப் பயிற்சிகள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும். கீவ் மீது ரஷ்யா ஒரு புதிய தரைவழித் தாக்குதலை […]

ஐரோப்பா

அணுசக்தி பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் புட்டின் – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

  • April 27, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுசக்தி பயங்கரவாதம் செய்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், செர்னோபில் அருகே ரஷ்யா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் வரலாற்றை மீண்டும் நிகழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். செர்னோபில் பேரழிவின் 40வது ஆண்டு நினைவு நாளில் பேசிய ஜெலென்ஸ்கி, இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். ரஷ்ய-ஈரானிய ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் அந்த ஆலைக்கு மேல் தொடர்ந்து பறப்பதையும், கடந்த ஆண்டு அவற்றில் ஒன்று பாதுகாப்பு வளையத்தைத் தாக்கியதையும் […]