விளையாட்டு

WPL – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற RCB

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீராங்கனைகள் மெக் லானிங் , ஷாபாலி வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஷாபாலி வர்மா 23 ரன்களில் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து வந்த ,ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சிறப்பாக ஆடி வந்த மெக் லானிங் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி வீராங்கனைகளும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் 18.3ஓவர்கள் முடிவில் 113ரன்களுக்கு டெல்லி அணி ஆட்டமிழந்தது . பெங்களூரு அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட் , மோலினக்ஸ் 3 விக்கெட் , ஆஷா சோபனா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா , சோபி டெவின் இருவரும் அதிரடி காட்டினர். நிலைத்து ஆடி பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டனர் .

இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், சோபி டெவின் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்மிருதி மந்தனா 31 ரன்களுக்கு வெளியேறினார்.

தொடர்ந்து ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரி இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர்.கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் 3 பந்துகளில் பெங்களூரு அணி இலக்கை எட்டியது

இறுதியில் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்தது.இதனால் 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content