ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் : ஜெர்மனியின் விமான நிலையம் மூடப்பட்டது!

  • May 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் ட்ரோன் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை செய்தித் தொடர்பாளர், இரு விமானிகள் ட்ரோனை இனங்கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வருகை தந்தது. அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டதை தொடர்ந்து  ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் ஒருங்கிணைந்து ஓடுபாதையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!