இலங்கை

மக்களுக்கு சிறந்த சேவையை தாமதமின்றி செய்ய வேண்டும் – சரவணபவன் தெரிப்பு

பணிப்பாளராக இருந்தாலும் குழுத் தலைவராக செயற்படுவதையே நான் விரும்புகின்றேன் என மாகாண பணிப்பாளர் என்.சரவணபவன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் (17) கடமையை பொறுப்பேற்ற பின்னர் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளையும் ஊழியர்களின் பிரச்சினைகளையும் நான் நன்கு அறிந்தவன்.
திருகோணமலை மாவட்டத்தை மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண பிரச்சனைகளையும் அறிந்தவன் என்ற அடிப்படையில் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் சிறந்த சேவையை தாமதம் இன்றி வழங்க வேண்டும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் புவனேந்திரநாதன், திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.எம்.எம்.முனாஸ் டொக்டர் லதாவின் மற்றும் டொக்டர் ஜயந்தன் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்