பிரான்ஸில் ரோந்து சென்ற இரு அதிகாரிகள் மீது கத்திகுத்து தாக்குதல்
பிரான்ஸில் இரண்டு மாநகராட்சி காவல்துறையினர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வில்சன் மாவட்டத்தில் உள்ள ரூ டி’ஆஸ்டர்லிட்ஸ் (d’Austerlitz) தெருவில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு அதிகாரிகளும் ரோந்து சென்றுக்கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர் தாக்குதலை நடத்தியுள்ளார்.
சந்தேக நபர் மூன்று கத்திகளை வைத்திருந்ததாக பிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர், அதிகாரிகளை நோக்கி சைகை காட்டிய பின்னர் அவர்களை அணுகி, கத்தியுடன் அவர்கள் மீது பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் பாரிய போராட்டத்தின்பின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




