இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த காலக்கெடு நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல்களைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.




