நட்புறவை வலுப்படுத்தும் வடகொரியா – ரஷ்யா!
வட கொரியாவும் ரஷ்யாவும் தங்களின் வளர்ந்து வரும் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் புதிய பாலத்தை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
துமென் ஆற்றின் குறுக்கே இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்களின் நடமாட்டம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நெடுஞ்சாலை வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்படவுள்ள 850 மீட்டர் (2,789 அடி) நீளம் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது.
கொரியப் போருக்குப் பிறகு 1959-ல் நிறுவப்பட்ட இரயில் இணைப்பான, ஏற்கனவே உள்ள “நட்புப் பாலத்திற்கு” அருகில் இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.




