இலங்கை செய்தி

6.6 மில்லியன் பெறுமதியான தங்க நாணயத்தை திருடிய மூவர் கைது

பண்டாரகம வ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து எலிசபெத் மகாராணியின் உருவம் பதித்த தங்க நாணயத்தை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்க நாணயத்தின் எடை 311 கிராம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தலை, பாதுக்க மற்றும் சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தங்க நாணயத்தின் உரிமையாளரான 57 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் தனது அவுஸ்திரியா கணவர் ஜேர்மனிக்கு சென்று கடந்த மாதம் 21 ஆம் திகதி இலங்கை திரும்பியதாகவும், குறித்த வெளிநாட்டவரால் இந்த தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சமையலறை கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் இந்த திருட்டைச் செய்தது தெரியவந்தது. தங்க நாணயத்தின் பெறுமதி 6.6 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content