உலகம்

ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான நாடுகளுக்கு கடத்திய ட்ரம்ப் நிர்வாகம்!

ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்களை மத்திய ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க பிரஜைகள் அந்நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வழக்கறிஞர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை மரண தண்டனை என விவரித்துள்ளனர்.

உள்நாட்டுப் போர், ரஷ்ய துணை ராணுவப் படைகளின் இருப்பு, மற்றும் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு மொழித் திறனோ அல்லது தொடர்புகளோ இல்லாதது உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அபாயங்களை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்படி நாடு கடத்தலுக்காக ட்ரம்ப் நிர்வாகம் சுமார் 20 நாடுகளுடன் இரகசிய ஒப்பந்தங்களை முன்னெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு மில்லியன் கணக்கில் பணம் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்