உலகம்

டென்மார்கில் 1600 பேர் கட்டாய இராணுவ சேவையில் இணைவு

டென்மார்க்கில் கட்டாய இராணுவ சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் இன்றைய தினம் சுமார் 1600 இராணுவ வீரர்கள் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

அவர்கள் 11 மாத கால சேவைக் காலத்தைத் தொடங்குகிறார்கள்.

2024-ல், முதல் முறையாகப் பெண்களையும் உள்ளடக்கி கட்டாய இராணுவ சேவையை நீட்டிப்பதாகவும், வழக்கமான சேவைக் காலத்தை நான்கு மாதங்களிலிருந்து 11 மாதங்களாக அதிகரிப்பதாகவும் டென்மார்க் கூறியது.

அதே நேரத்தில், கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுபவர்களின் எண்ணிக்கை 2033 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 5,000-லிருந்து 7,500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த மாத இறுதியில் முதல் முறையாக கிரீன்லாந்திற்கு கட்டாய இராணுவ சேவைக்கு உட்பட்ட வீரர்களை அனுப்ப டென்மார்க் தயாராகி வருகிறது.

அங்கு,நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவு, ஒரு மாதத்திற்கு தொழில்முறைப் படைகளிடமிருந்து செயல்பாட்டுப் பணிகளைப் பொறுப்பேற்க உள்ளது.

கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பில் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கட்டாய இராணுவ சேவை முக்கியத்துவம்மிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்