ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு! உற்றுநோக்கும் உலகம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள், சீனாவில் உள்ள மக்கள் மாபெரும் மண்டபத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியுள்ளன.
இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான இந்த முக்கிய சந்திப்பிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் தரப்பில் இருந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறைச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், கருவூலத்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் ஆகியோர் ஜனாதிபதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் சீனத் தரப்பு அதிகாரிகளின் பட்டியலை சீன ஊடகங்கள் இன்னும் வெளியிடவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய வர்த்தக உறவுகள், பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய அரசியல் சூழ்நிலைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




