ஐரோப்பா செய்தி

அரசாங்கம் வலுவான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் – மன்னர் நம்பிக்கை

உலகம் தற்போது அதிகரித்து வரும் அபாயகரமான மற்றும் நிலையற்ற சூழலில் இருப்பதாக மன்னர் மூன்றாம் சாள்ஸ் (Charles III) எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவின் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதார அமைப்புகள் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகும் நிலையில்,  அரசு அதற்கு வலிமையுடன் பதிலளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல் உள்ளிட்ட உலகளாவிய பதற்றங்களை சுட்டிக்காட்டிய அவர் நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார நிலைத்தன்மையையும் காக்க அரசு உறுதியுடன் செயல்படும் என்று கூறினார்.

இதேவேளை, யூத-எதிர்ப்பை எதிர்க்கவும் அனைத்து சமூகங்களும் பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்யவும்  அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மன்னர் வலியுறுத்தினார்.

மேலும், வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்த்தல் போன்ற நடவடிக்கைகள் அரசின் முன்னுரிமையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் “வலுவான, நிலையான மற்றும் நியாயமான பொருளாதார வளர்ச்சியை” உருவாக்கும் நோக்கில் செயல்படும் என உரை முடிவில் தெரிவிக்கப்பட்டது

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!