இலங்கை

கடற்தொழிலுக்காகச் சென்ற மீனவருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை-பாட்டாளிபுரம் கிராமத்திலிருந்து கடற்தொழிலுக்காகச் சென்ற மீனவர் மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் (11-08-2023) காலை வரை கரை திரும்பாமை மற்றும் அவரது தொலைபேசி இயங்காமை போன்ற காரணங்களினால் பொலிஸ் கடற்படை பிரதேச செயலாளர் போன்றோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டதுடன் கடற்றொழில் அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டது.

எனினும் சீனன் வெளி மீனவர் சங்கத்தினர் கடற் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் மேற் கொண்ட தேடுதலின் பயனாக இன்று (12-08-2023) மாலை அவர் பயன்படுத்திய நங்கூரமறுந்து ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லப் பட்ட போது திரும்பி வருவதற்கு எரிபொருளின்றி தவித்த வேளையில் ஆழ் கடல் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த றோலர் படகால் காப்பாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உணவு நீரின்மையாலும், கடுமையான கடல் சீற்றத்தாலும் பாதிப்புற்று சோர்வடைந்திருந்த அம்மீனவர் 1990 அவசர அம்பூலன்ஸ் சேவை மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content