தான்சானியாவின் துணை ஜனாதிபதி பதவி விலகல் – ஓராண்டுக்குள் நடந்தது என்ன?
தான்சானியாவின் துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டுக்குள் இராஜினாமா செய்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹசன் Samia Suluhu Hassan அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வரும் துணை ஜனாதிபதி இம்மானுவேல் ஜான் நிசிம்பி Emmanuel John Nchimbi , செப்டம்பர் 4 ஆம் திகதியுடன் பதவியில் இருந்து விலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசிம்பி முன்னதாக ஜனாதிபதியின் ஆளும் கட்சியான சாமா சா மாபிந்துசி , Chama cha Mapinduzi (CCM)-யின் பொதுச் செயலாளராக இருந்தார்.
கடந்த மாதம் ஒரு உரிமைக் குழு நடத்திய நிகழ்வில், புதிய அரசியலமைப்புக்காகப் போராடுமாறு அவர் கூறிய கருத்துக்கள் ஆளும் கட்சியினர் இடையே பெறும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அந்த கருத்துக்கள் தேவையற்றவை என உட்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டத்தை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.



