சுவீடன் வாள்வெட்டு சம்பவம் – இரண்டாவது சந்தேக நபர் கைது
சுவீடனில் கடந்த வாரம் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்வீடன் அரசு வழக்கறிஞர்கள் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இரண்டாவது நபர், கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரை முறையாக காவலில் வைக்க நீதிமன்றத்தை நாடுவதா இல்லையா என்பது குறித்து வியாழக்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது சந்தேக நபர், தாக்குதல் நடத்தியவருக்கு எவ்வாறு உதவினார் என்பதை அந்த அமைப்பு குறிப்பிடவில்லை.
மத்திய ஸ்வீடன் நகரமான ஃபாகர்ஸ்டாவில் உள்ள பிரினெல் உயர்நிலைப் பாடசாலையில் வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றது.
இதில் 17 வயதுடைய மாணவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



