தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு!!
தமிழக முதமைச்சர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று (11) முதல் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த Z+ பாதுகாப்பு படைப் பிரிவில் 55 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 24 மணிநேரமும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.
மேலும், முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றம் 24 மணிநேரமும் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக உயர்ந்த அளவில் அளிக்கப்படும் Z+ பாதுகாப்பானது முதலமைச்சர்கள், உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கடும் அச்சுறுத்தல்களை சந்திக்கக்கூடிய பெரும் புள்ளிகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கக்கூடிய பாதுகாப்புப் பிரிவாக காணப்படுகிறது.




