ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் கடத்தப்பட்ட சிறுமியை தேடி தொடர்கிறது வேட்டை!

  • April 29, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் கடத்தப்பட்ட சிறுமியை தேடும் பணி இன்று 4 ஆவது நாளாக தொடர்கின்றது. சிறையிலிருந்து விடுதலையான ஜெபர்சன் லூயிஸ் என்பவராலேயே அச்சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதில் இருந்து தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது. தற்போது நான்காவது நாளை எட்டியுள்ள இந்தத் தீவிரத் தேடுதல் வேட்டையில், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் குதிரைப்படை வீரர்களுடன் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் இணைந்துள்ளனர். அந்தச் சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் அதிகாரிகள், அப்பகுதியின் கரடுமுரடான நிலப்பரப்பில் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்கள் அவசர சந்திப்பு! பின்னணி என்ன?

  • April 28, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மூன்று பிரதான பௌத்த பீடங்களி ன்மகா சங்கத்தினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (27) நடைபெற்றது. இன்று பிற்பகல் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்து!

  • April 28, 2026
  • 0 Comments

கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள “நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அதன் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். “மலையகத் தமிழர்” என அடையாளம் வழங்குவதற்கு அப்பால் அவர்கள் அர்த்தமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்குரிய நிலம் உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் சிறிதுங்க ஜயசூரிய கூறியவை வருமாறு, “இலங்கையென்பது ஜனநாயக நாடு. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை இருக்கின்றது. […]

இலங்கை செய்தி

வவுனியா மாநரசபையில் நிர்வாக் சீர்கேடு: ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • April 28, 2026
  • 0 Comments

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறும், சட்டவிரோத வரி அறவீடுகளைக் கைவிடுமாறும் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா […]

இலங்கை செய்தி

யாழில் தீக்கிரையானது “தபோவனம்”: நூல்களும் எரிந்து நாசம்!

  • April 28, 2026
  • 0 Comments

யாழ். அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் “தபோவனம்” சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த “தபோவனத்தின்” பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வைத்தியர் தயா சோமசுந்தரத்தால் பிரதேச சிறுவர்களின் நலன் கருதி குறித்த நிறுவனம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் முன்பள்ளி சிறுவர்கள் முதல் தரம் 11 வரையான 90 க்கும் அதிகமான மாணவர்கள் கற்றல் விளையாட்டு […]

செய்தி

பிராந்திய மோதல்கள் அனைத்தும் பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட வேண்டும் – கட்டார் வலியுறுத்தல்

  • April 28, 2026
  • 0 Comments

பிராந்தியத்தில் உருவாகும் எந்தவொரு மோதலும் பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கட்டார் (Qatar) வலியுறுத்தியுள்ளது. கட்டாரின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், தற்போதைய பிரச்சினை மத்தியஸ்தருடன் தொடர்புடையதல்ல என்றும், பாகிஸ்தான் (Pakistan) தனது மத்தியஸ்தப் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுடனும் கட்டார் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானின் முயற்சிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் 9 வயது சிறுவன் பலி: காசாவில் தொடரும் சோகம்!

  • April 28, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 வயது சிறுவர் ஒருவர் பலியாகியுள்ளார். தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்தன. மேலும், வடக்கு காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலில் பெண் ஒருவர் படு காயமடைந்துள்ளார். காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 818 வரையான […]

இலங்கை செய்தி

ஊடகர் சிவராமின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

  • April 28, 2026
  • 0 Comments

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் மட்டக்களப்பு ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த நினைவஞ்சலியினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்ட […]

உலகம் செய்தி

Starlink இணைய வசதியை பயன்படுத்தி உளவு பார்த்தோர் ஈரானில் கைது!

  • April 28, 2026
  • 0 Comments

ஈரானில் ஸ்டார்லிங்க் Starlink devices செயற்கைக்கோள் இணைய வசதியைப் பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் குடியிருப்பொன்றில் ரகசியத் தளம் அமைத்து, வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் முக்கியமான இடங்களைப் படம் பிடித்து மற்றும் காணொளிகளாக எடுத்து எதிரி நாடுகளின் ஊடகங்களுக்கு அனுப்பிய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் 60 நாட்களுக்கு மேலாக இணைய […]

உலகம் செய்தி

உலக அரங்கில் வலிமை இழந்த அமெரிக்கா: ஈரான் சுட்டிக்காட்டு!

  • April 28, 2026
  • 0 Comments

சுதந்திரமான நாடுகளின் கொள்கைகளில் தலையிடும் வலிமையை அமெரிக்கா இழந்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனவே, அமெரிக்காவால் இனி ஏனைய நாடுகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்க முடியாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Reza Talaei-Nik சுட்டிக்காட்டினார். அமெரிக்கா தனது சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற கோரிக்கைகளைக் கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைதி பேச்சுக்கான ஈரானால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய முன்மொழிவுகளை அமெரிக்கா பரிசீலித்து வரும்வேளையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு கருத்து வெளியாகியுள்ளது. சர்வதேச அரசியல் சூழல் […]

error: Content is protected !!