ஐரோப்பா செய்தி

நடத்தை மாறினால் மட்டுமே ஈரான் மீதான தடை நீங்கும்: EU அறிவிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

ஈரானின் நடவடிக்கைகளில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சிந்திக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தடைகளை நீக்குவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் ஒரு உண்மையான மற்றும் சாதகமான மாற்றம் ஏற்படும் போது மட்டுமே, அந்தத் தடைகளை நீக்குவது குறித்து நாம் சிந்திக்க […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம்: இஸ்ரேல் நிதி அமைச்சர் போர்க்கொடி!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டிற்கு எதிராக இஸ்ரேலின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) மற்றும் யாஷர் (Yashar) கட்சியின் தலைவரான காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) ஆகியோரே இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர். “இது ஒரு தோல்வியடைந்த அரசாங்கத்தின் மோசமான முடிவாகும். பிரதமர் நெதன்யாகு வழங்கி வந்த ‘முழுமையான வெற்றி’ என்ற வெற்று வாக்குறுதிகளுக்கும், தற்போது உருவாகியுள்ள இந்த உடன்பாட்டிற்கும் இடையே ஒரு […]

உலகம் செய்தி

போர் விமானங்கள், கப்பல்களை களமிறக்கும் பிரான்ஸ்!

  • June 15, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான கூட்டு ராணுவ நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தொடங்கப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார். பிரான்சில் இன்று நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த இந்த தகவலை வெளியிட்டார். ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநிறுத்த பிரிட்டனும் பிரான்சும் மிக விரைவாகச் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் […]

உலகம் செய்தி

சுரேஷ் சலே விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?

  • June 15, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சுரேஷ் சலே புலனாய்வு அதிகாரியாக, அரச அதிகாரியாக இருந்தவர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரிந்தவற்றை கூறி, விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு தொடர்பில்லையெனில், விசாரணைக்கு ஒத்துழைப்பதே சிறந்தது. குற்றவாளியெனில்தான் […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணைபாதுகாப்பு: பிரிட்டன், பிரான்ஸ் கைகோர்ப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டை பிரிட்டன் பிரதமர் Keir Starmer வரவேற்றுள்ளார். இது மிகவும் குறிப்பிடத்தக்க திருப்புமுனை எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் விரிவாக பேச்சு நடத்தியதாகவும் Keir Starmer குறிப்பிட்டுள்ளார். G7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் Keir Starmer ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு , “இந்த உடன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த சில வாரங்களாக […]

இலங்கை செய்தி

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

  • June 15, 2026
  • 0 Comments

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும், பலாலி சந்திக்கு அருகிலும் இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இராணுவ நடவடிக்கையினால் தங்களின் […]

உலகம் செய்தி

படைகளை மீளப்பெற இஸ்ரேல் மறுப்பு: மீண்டும் பரபரப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் படைகளை தொடர்ந்து தக்க வைக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இஸ்ரேலிய எல்லைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாதக் கட்டமைப்புகளை முழுமையாக அழிப்பதே தங்களின் முதன்மை இலக்கு என அவர் விளக்கியுள்ளார். மேலும், இந்த […]

உலகம் செய்தி

அமைதி திரும்பினாலும் ஹார்முஸ் நீரிணையால் ஆபத்து!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தானதும், கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஹார்முஸ் நீரிணை திறக்கப்படவுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக பரபரப்பான இந்த எண்ணெய் போக்குவரத்துப் பாதையை ஈரான் முழுமையாக முடக்கியிருந்தது. அத்துடன், கண்ணி வெடிகளும் வீசப்பட்டன. இவ்வாறு ஹார்முஸ் நீரிணையில் வீசப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாகக் கண்டறிந்து அகற்றுவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என்று அமெரிக்க கடற்படையின் ஓய்வுபெற்ற […]

உலகம்

முடிவுக்கு வந்த போர் : சர்வதேச நிதிச் சந்தைகளில் உச்சம் தொட்ட பங்குகள்!

  • June 15, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  சர்வதேச நிதிச் சந்தைகள் இன்ற ஏற்றம் கண்டுள்ளன. ஸ்பானிய பங்குச் சந்தை இன்றைய முக்கிய பங்குகளில் ஒன்றாகத் தொடங்கியது. ஐபெக்ஸ் (Ibex) 35 குறியீடு அனைத்து எதிர்ப்பு நிலைகளையும் தகர்த்து, 19,000 புள்ளிகளைக் கடந்து 19,122 புள்ளிகளை எட்டி, ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இந்த சமீபத்திய எழுச்சியுடன், இந்த ப்ளூ-சிப் ( blue-chip) குறியீடு ஆண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் 10% உயர்வை […]

இலங்கை செய்தி

கேபியிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் குறித்து தீவிர விசாரணை!

  • June 15, 2026
  • 0 Comments

புலிகள் அமைப்பின் சர்வதேச வலைப்பின்னலின் முன்னாள் தலைவரான கேபி எனப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டதன், பின்னர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் பெருந்தொகை தங்கம் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய முக்கிய பிரதானிகள் சிலர் விசாரணைக்கு வரவழைக்கப்படவுள்ளன. சிங்கள இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வாக்குமூலங்களின் மூலம் வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் […]