காணி விடுவிப்பு: வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று (15.06.2026) ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக […]













