ரஷ்யா மீது மூர்கமாக தாக்கிய உக்ரைன் – 555 ட்ரோனகள் ஊடுறுவல்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையொன்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியாக கிரெம்ளின் குற்றம் சாட்டிள்ளது.
நேற்று இரவு ரஷ்யாவின் பல பிராந்தியங்களில் 555 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் ஊடுறுவியதாகவும், அவற்றை தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் ரஷ்யாவின் தலைநகரைக் குறிவைத்த சுமார் 180 ஆளில்லா விமானங்கள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.




