தமிழக அரசியலில் பரபரப்பு-தொடரும் ராஜினாமா
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா முடிவடைந்திருந்தாலும், தமிழக அரசியல் களம் இன்னும் பரபரப்பாகவே உள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நாள்தோறும் அரசியல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கையளித்தார். சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 2011 முதல் விராலிமலை தொகுதி […]













