ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள சம்பவம்: சுயாதீன விசாரணை கோரும் அமைப்புகள்!
இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் போராட்டக்காரர்களை காவல்துறை அப்புறப்படுத்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் Anthony Albanese தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து காவல்துறை தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு இருந்தாலும், காவல்துறையின் ஆலோசனைகளை ஏற்பாட்டாளர்கள் பின்பற்றாதது […]













