உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – விரிவடையும் ட்ரம்பின் அதிகாரங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரமான கூட்டாட்சி அமைப்புகளின் தலைவர்களை ஜனாதிபதி பணிநீக்கம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவருடைய அதிகாரங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பானது 91 ஆண்டுகால பழைமையான சட்ட விதியை மாற்றியமைத்துள்ளது. அதேநேரம் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் மற்றும் நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம் உள்ளிட்ட மேலும் பன்னிரண்டு சுதந்திரமான அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.




