திருநங்கைகளுக்கு ஆதரவான தீர்ப்புகள் இரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி
திருநங்கைகள் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான தடையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
இதற்கமைய முன்னதாக மாநில நீதிமன்றங்கள் திருநங்கைகளுக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்புகள் இரத்து செய்யப்பட்டதோடு, இடாஹோ (Idaho) மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் (West Virginia) அமுலில் உள்ள சட்டங்களை உறுதி செய்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் 25 மாநிலங்களில் இதுபோன்ற சட்ட நடைமுறை அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்றுக்களோடு ஒத்துப்போகிறது.
இடாஹோ மற்றும் மேற்கு வர்ஜீனியா ஆகிய மாநிலங்கள், இந்தச் சட்டங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நியாயமான மற்றும் பாதுகாப்பான போட்டியை உறுதி செய்வதாகக் கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.




