பெற்றோரை இழந்து தவிக்கும் 60,000 காசா குழந்தைகள்
இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியது முதல், காசா முனையில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்தது 60,737 குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளனர் . இதில் 52,095 குழந்தைகள் தங்களது தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களது தாயையும், 2,713 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். மேலும், 8,858 பேரைக் கொண்ட 2,276 குடும்பங்கள் “சிவில் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும்” மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் […]













