இலங்கை செய்தி

பாலைதீவு படகு விபத்து:பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

  • March 11, 2026
  • 0 Comments

யாழ். பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றபோது இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இவ்விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையிலிருந்து கடந்த 6ஆம் திகதி பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அன்றைய தினமே இருவர் உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 12 பேர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID இல் முறைப்பாடு!

  • March 11, 2026
  • 0 Comments

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் FCID, வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபா நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு […]

இலங்கை செய்தி

” பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைவோம்” – ஜனாதிபதி அறைகூவல்!

  • March 11, 2026
  • 0 Comments

“விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்.”  என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake. தெரிவித்தார். எனவே, மேற்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வணிக சமூகத்தினரும் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். நவீன உலகத்துடன் முன்னோக்கிச் செல்லத் தவறியதால் […]

இலங்கை செய்தி

” ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு ஒன்றிணைவோம்”

  • March 11, 2026
  • 0 Comments

ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (11.03.2026) காலை நடைபெற்றது. தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர விசேடமாகப் பங்கேற்ற இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், எமது வடக்கு மாகாணத்தின் […]

இலங்கை செய்தி

வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறையினருக்கு அழைப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

  “வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இத்துறையை மேம்படுத்துவதற்குத் தனியார் துறையினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்.” இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறைப் பங்குதாரர்களுடன் இன்று புதன்கிழமை (11) காலை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக எமக்குத் தற்போது ஒரு சாதகமான […]

உலகம்

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ – சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படத்தளம் இடிப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளமொன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை கடந்த வருடம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. ஆதனை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையிலேயே முழுமையாக இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 […]

ஆஸ்திரேலியா உலகம்

முடிவை மாற்றினார் தஞ்சம் கோரிய வீராங்கனை: ஈரான் திரும்ப திட்டம்!

  • March 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் கால்பந்தாட்ட அணி வீராங்களைகளில் ஒருவர் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். அவரது தனது தாய் நாட்டுக்கு திரும்பும் முடிவை எடுத்துள்ளார். மேற்படி தகவலை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் உறுதப்படுத்தியுள்ளார். குறித்த பெண் ஈரானிய தூதரக அதிகாரிகளுடன் வெளியேறியதால் மற்ற வீராங்கனைகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்த முடிவுகள் யாவும் எவ்வித அழுத்தமுமின்றி சுயவிருப்பத்தின் பெயரிலேயே எடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். எனினும், ஆஸ்திரேலிய அரசு தமது வீராங்கனைகளை பயமுறுத்தி […]

பொழுதுபோக்கு

‘துரந்தர்-2’ டிரெய்லர் சாதனை!

  • March 11, 2026
  • 0 Comments

‘துரந்தர்’ படத்தின் 2ஆம் பாகம் தொடர்பான முன்னோட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெற்றிநடை போட்டுவருகின்றது. ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர் -ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் மார்ச் 19 ஆம்; திகதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மேற்படி படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. வெளியான வெறும் 48 மணி நேரத்துக்குள் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: பொருளாதாரக் கண்காணிப்புக் குழு கூடி ஆராய்வு!

  • March 11, 2026
  • 0 Comments

பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு அமைய மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இக்குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரசல் அபொன்சு செயலாளராகவும் அழைப்பாளராகவும் […]

உலகம் செய்தி

மேலும் இரு ஈரானியர்களுக்கு தஞ்சம் வழங்கியது ஆஸ்திரேலியா!

  • March 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஈரானிய பெண் வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்கள் உட்பட எழுவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால் ஈரானில் இவர்களுக்கு உயிர்பயம் மற்றும் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அரசு மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியைச் செய்துள்ளது. சிட்னி விமான நிலையத்தில் வைத்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசப்பட்டு, எவ்வித அழுத்தமுமின்றி அவர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் தங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் […]

error: Content is protected !!