உலகம் செய்தி

தைவான் விவகாரம்: ட்ரம்பிடம் சீன ஜனாதிபதி கூறியது என்ன?

தைவான் விவகாரத்தை முறையாக கையாயாவிட்டால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

இதன்போதே சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார் என சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீன – அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினை மிக முக்கியமான விடயம் என சுட்டிக்காட்டிய ஜி ஜின்பிங், அது சரியாகக் கையாளப்பட்டால் இரு தரப்பு உறவு ஸ்திரத்தன்மையை அனுபவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லையேல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்றும் ஜி ஜின்பிங் கூறினார் என சீன அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி