நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு ஐ.தே.க. வலியுறுத்து!
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயலுமை தமக்கு இல்லையென அரசு கருதினால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்வதே சிறந்த தேர்வு என்று ஐக்கிய தேசியக் கட்சி UNP தெரிவித்துள்ளது. காலியிலுள்ள ஐ.தே.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன Vajira Abeywardena மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ நாடொன்றுக்கு வெளிநாட்டு கொள்கையென்பது மிக முக்கியமாகும். நாட்டின் கொள்கையை சர்வதேசத்துக்கு வெளிவிவகாரக் கொள்கையே எடுத்துரைக்கும். எனவே, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அதில் மாற்றம் […]












