செய்தி விளையாட்டு

IPL 2026: play-off சுற்று நாளை ஆரம்பம்!

IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. play-off சுற்று நாளை (26) ஆரம்பமாகின்றது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் play-off சுற்றுக்கு முதன் மூன்று அணிகளாக முன்னேறின.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியுடன், ராஜஸ்தான் அணி மோதியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ஓட்டங்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்து play-off சுற்றுக்கு முன்னேறியது.

play-off தகுதிச்சுற்று 1 போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்குகிறது.

இதில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.

தோற்கும் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வெல்ல மற்றொரு வாய்ப்பு (தகுதிச்சுற்று 2-ல்) கிடைக்கும்.

எலிமினேட்டர் சுற்று (Eliminator) புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 4-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும்.

எலிமினேட்டர் சுற்றுப் போட்டி 27 ஆம் திகதி முல்லன்பூரில் நடைபெற உள்ளது.

இதில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி, தகுதிச்சுற்று 1-ல் தோற்ற அணியை அடுத்த போட்டியில் எதிர்கொள்ளும்.

தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியும், தகுதிச்சுற்று 1-ல் தோற்கும் அணியும் தகுதிச்சுற்று 2-ல் மோத உள்ளன.

இந்தப் போட்டி மே 29 ஆம் திகதி முல்லன்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தகுதிச்சுற்று 1-ல் வென்ற அணியுடன் மோதும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!