ஐரோப்பா

புட்டின் – ட்ரம்பிடையே ஒரு மணிநேரம் தொலைபேசி உரையாடல்

  • July 5, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்னிடம் சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரைன் போர்க்களத்தின் உண்மையான நிலவரத்தை புட்டின் விவரித்ததாக தெரியவருகிறது. அத்துடன் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கான அமெரிக்க அதிபரின் திட்டங்களின் பின்னணி உட்பட, உக்ரைன் விவகாரம் குறித்து  விவாதித்தாக கூறப்படுகிறது. உக்ரைனில் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் புட்டின் இதன்போது எடுத்துரைத்துள்ளார். ஆனால் அது ரஷ்யாவின் […]

ஐரோப்பா

பதற்றத்தை அதிகரிக்க உக்ரைன் சூளுரை : புட்டின் பிறப்பித்த உத்தரவு

  • July 4, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது  இரவு முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், பத்து பேர் காயமடைந்தனர். இதற்கு முன்னர், கீவ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் குறைந்தது முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கப் போவதாக சூளுரைத்துள்ளன. உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்திற்கு எதிரான “மிகப்பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதல்கள்” தொடர வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  கட்டளையிட்டுள்ளார். டான்பாஸ் பகுதியில் உள்ள ஒரு முக்கிய […]

ஐரோப்பா

புட்டினுக்கு நிபந்தனை : இலக்கு மாறாமல் இருக்கும் ரஷ்யா

  • June 30, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், இல்லையெனில் மேலும் தாமதங்களையும், அதிக வீரர்களின் தியாகத்தையும் சந்திக்க நேரிடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றுவதில் ரஷ்யா மீண்டும் மீண்டும் தோல்வியடைவதை கேலி செய்துள்ளதுடன், மொஸ்கோ நிர்ணயித்த 15 காலக்கெடுக்கள் தவறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உக்ரைன் தனது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களால் ரஷ்யா ஒரு ஆழமான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. […]

ஐரோப்பா

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் – அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான புட்டின்

  • June 24, 2026
  • 0 Comments

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யா அமைதி பேச்சுவார்ததைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இஸ்தான்புல்லில் முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடர வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தங்களை உக்ரைனிய தூதுக்குழு ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனின் தொடர்சியான தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அழைப்பு : புட்டின் நிராகரிப்பு!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில், அவரின் அழைப்பை புட்டின் நிராகரித்துள்ளார். அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தனது கடிதத்தில், பெரும்பாலான ரஷ்யர்கள் உக்ரைனின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், அதிக பணவீக்கம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் சோர்வடைந்துவிட்டதாகவும், அமைதிக்குத் தயாராக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார். மேலும், போரைத் தொடர்வது புதினின் சொந்த நிலைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும், ரஷ்யா […]

உலகம்

புட்டின், ட்ரம்ப்பை தொடர்ந்து கிம் ஜாங் உன்னை சந்திக்கும் ஷி ஜின்பிங்!

  • May 25, 2026
  • 0 Comments

சீன அதிபர் ஷி ஜின்பிங் ( Xi Jinping) அடுத்த வாரம் வடகொரியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன ஜனாதிபதி சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து வடகொரிய தலைவரை சந்திக்கவுள்ளார். ஷி ஜின்பிங்கின் இந்தப் பயணம், கிம் ஜாங் உன் மற்றும்  ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு உந்துதலை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்ப்பதாக  தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. இந்தப் […]

உலகம்

சீன ஜனாதிபதியை சந்திக்கும் புட்டின்!! உற்றுநோக்கும் உலகம்!

  • May 20, 2026
  • 0 Comments

சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு, “பழைய நண்பர்களுக்கு” இடையே தேநீர் அருந்தியபடி நடைபெறும் ஒரு நெருக்கமான தனிப்பட்ட உரையாடலுடன் நிறைவடையும் என  சீனாவின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரம்பின் சீன விஜயத்தை தொடர்ந்து புட்டின் சீனா செல்வதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதுடன், உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகிறது. அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்டிருக்கும் இரண்டு முக்கிய நாடுகளின் தலைவர்கள், பெய்ஜிங்கிற்கு […]

ஐரோப்பா

சீனா – ரஷ்யா உறவில் முன்னேற்றம் : புட்டின் நெகிழ்ச்சி!

  • May 19, 2026
  • 0 Comments

தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ரஷ்யாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். சீனப் பயணத்திற்கு முன்னதாக காணொளி வாயிலாக இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் ‘முன்னெப்போதும் இல்லாத நிலையை’ எட்டியுள்ளதாக கூறியுள்ளார். பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் சமத்துவ அடிப்படையிலான கொள்கைகளில் […]

ஐரோப்பா

முடிவுக்கு வரும் உக்ரைன் போர் – புட்டின் வெளியிட்ட செய்தி!

  • May 10, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தான் எண்ணுவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். மொஸ்கோவில்  மிக எளிமையாக நடைபெற்ற வெற்றி தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டப்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், தனது விருப்பமான பேச்சுவார்த்தைப் பங்காளியாக ஜெர்மனியின் முன்னாள் அதிபர் கெர்ஹார்ட் ஷரோடர் (Gerhard Schroeder) இருப்பார் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் […]

ஐரோப்பா

அணுசக்தி பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் புட்டின் – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

  • April 27, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுசக்தி பயங்கரவாதம் செய்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், செர்னோபில் அருகே ரஷ்யா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் வரலாற்றை மீண்டும் நிகழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். செர்னோபில் பேரழிவின் 40வது ஆண்டு நினைவு நாளில் பேசிய ஜெலென்ஸ்கி, இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். ரஷ்ய-ஈரானிய ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் அந்த ஆலைக்கு மேல் தொடர்ந்து பறப்பதையும், கடந்த ஆண்டு அவற்றில் ஒன்று பாதுகாப்பு வளையத்தைத் தாக்கியதையும் […]