உலகம் செய்தி

அமெரிக்கா அச்சுறுத்தலை கைவிட்டால் மாத்திரமே பேச்சு வார்த்தை சாத்தியம் – ஈரான் திட்டவட்டம்

அமெரிக்காவுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளதென வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் தனது “அச்சுறுத்தும் சொல்லாடல்கள்” மற்றும் “விரிவாக்க அணுகுமுறையை” கைவிட்டால், இருதரப்பு உரையாடலுக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பல பிராந்திய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் போது இந்த கருத்தை அராக்சி வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றினால், ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைக்கு ஈரான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது தாக்குதலுக்கும் எதிராக நாட்டை பாதுகாக்க ஈரானின் ஆயுதப் படைகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!