ஐரோப்பா

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – தாக்குதால்தாரி உள்பட மூவர் பலி

  • August 2, 2026
  • 0 Comments

மொஸ்கோவில் பெண் ஒருவர் கொண்டுவந்த கையால் செய்யப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது  21 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குட்ரிங்க்ஸ்காயா (Kudrinkskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றப்போது பாதுகாப்பு ஊழியர் அவரை தடுத்ததாகவும், இதன்போதே வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும் மொஸ்கோ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. […]

ஐரோப்பா

மொஸ்கோவின் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு – முக்கிய தலைவர் படுகொலை!!

  • June 10, 2026
  • 0 Comments

மொஸ்கோவின் பாலாஷிகாவில் (Balashikha)  நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஏவுகணை மற்றும் பீரங்கிப் படைப் பிரிவின் தலைவர் டமிர் டேவிடோவ் (Damir Davydov)  கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மொஸ்கோவின் வெவ்வேறு பககுதிகளில் இன்று இரண்டு கார்குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமீபகாலமாக உக்ரைன் எல்லை பகுதிகளை தாண்டி மொஸ்கோவை குறிவைத்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 21வது முறையாகத் தடைகளை விதிக்கும் […]

ஐரோப்பா

மொஸ்கோ மீது தீவிர ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்த உக்ரைன் – நால்வர் பலி!

  • May 17, 2026
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மொஸ்கோவில் 03 பேரும் நான்காவது நபர்   உக்ரைனை ஒட்டியுள்ள பெல்கோரோட் பிராந்தியத்திலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் வான்பரப்பில் 1,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.