தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க பெரு, மெக்சிகோ இணக்கம்
பெருவும் மெக்சிகோவும் தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இருநாடுகளும் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லிமாவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் பிரதமர் பெட்ஸி சாவேஸ் (Betssy Chavez), மெக்சிகோவிற்குப் பயணம் செய்ய லிமா அரசாங்கம் பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சாவேஸுக்கு மெக்சிகோ அரசாங்கம் தஞ்சம் வழங்கியதைத் தொடர்ந்து, பெருவுடனான தூதரக உறவுகள் சீர்குலைந்திருந்த நிலையில், தற்போது உறவுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






