மெக்சிகோவில் முகாமிட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு பலத்த பாதுகாப்பு
மெக்சிகோவில் நடைபெறும் கால்பந்து போட்டிக்காக அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலை 100-க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத கவச உடை அணிந்த கலவரத் தடுப்பு பாதுகாத்து வருகின்றனர்.
மெக்சிகோ ஆதரவாளர்கள் ஈக்வடார் வீரர்களுக்கு இடையூறு செய்தமையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், காவல் நாய் மற்றும் ட்ரோன்களும் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே புயல் வர வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்புகள் காரணமாக ஆட்டத்தை முன்கூட்டியே நடத்துவது குறித்து முன்னதாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், மெக்சிகோ சிட்டியில் நடைபெறவுள்ள போட்டி திட்டமிட்ட நேரத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டியை வேறு நேரத்திற்கு மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஃபிஃபா உறுதிப்படுத்தியுள்ளது.




