இலங்கை

மஹர சிறையில் இருந்து 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

  • August 2, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அதிலுள்ள மொத்தம் 104 கைதிகள் வேறு பல சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்) மற்றும் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். அதன்படி, கைதிகள் தும்பர, வெலிக்கடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவ ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள் அறிக்கையில், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹரா சிறைச்சாலையின் நுழைவாயிலில் உள்ள சாலைத் தடுப்பிற்கு […]

இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றம்

  • August 2, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் இருந்து சுமார் 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

மஹர சிறைச்சாலையை கண்காணிக்க பெல் விமானம் மற்றும் ட்ரோன் களமிறக்கம்

  • August 1, 2026
  • 0 Comments

மஹர சிறையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானமும் ட்ரோன் ஒன்றும்  களமிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், 7 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றித் திரண்டுள்ளதாகவும், அவர்களிடையே  அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிக்க விமானப்படை ஒரு விமானத்தையும் […]

இலங்கை

மஹார  சிறைச்சாலை பதற்றம் – கைதி ஒருவர் உயிரிழப்பு

  • August 1, 2026
  • 0 Comments

மஹார  சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹார  சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஏழு பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் காயங்களால் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.