அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதை: அரசு மறுப்பு!

  • June 9, 2026
  • 0 Comments

சிஐடி தடுப்பு காவலின்கீழ் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் […]

இலங்கை செய்தி

முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

  • June 9, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இவற்றுடன், அவருக்கு 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சரண குணவர்தன தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக நான்கு […]

ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீதான தாக்குதலை நிறுத்துமாறு முக்கிய இரு நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம்!

  • June 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 3 ஆவது பாதுகாப்பு கொள்கை ஆலோசனை கூட்டம் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இரு நாடுகளும் தங்களது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்களின் அடிப்படையில், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில் நெருக்கமாகச் செயல்பட இக்கூட்டத்தில் உறுதியேற்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் […]

இந்தியா செய்தி

இரும்பு ஆலையில் தீ விபத்து: 9 தொழிலாளர்கள் பலி!

  • June 9, 2026
  • 0 Comments

ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 4.15 மணிக்கு, எஸ்எம்எஸ் -2 கிடங்கில் இருந்து எஸ்டிசி – 3 க்கு 1500 டிகிரி வெப்பத்தில் உருக்கிய இரும்பு குழம்பை ராட்சத […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்காக ‘புலிப்புராணம்’ ஓதுகிறது மஹிந்த அணி!

  • June 9, 2026
  • 0 Comments

” புலி டயஸ்போராக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே சுரேஷ் சலே இலக்குவைக்கப்பட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பயங்கரவாத தடைச்சட்டம் தவறானது என சுட்டிக்காட்டியே ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அச்சட்டத்தை பயன்படுத்தியே சுரேஷ் சலேவை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 16 எலும்புக் கூடுகள் அடையாளம்!

  • June 8, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றன. இதன்போது சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 16 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் […]

ஐரோப்பா செய்தி

மீண்டும் போர் வெடித்தால் பாரிய நெருக்கடி ஏற்படும்: EU எச்சரிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் Kaja Kallas அழைப்பு விடுத்துள்ளார். சிலவேளை இந்தப் பதற்றம் முழுமையான போராக மாறினால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் தற்காலிக போர்நிறுத்தங்களும் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சைப்ரஸ் நாட்டின் நிகோசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் , வன்முறையைத் தவிர்த்து அமைதி […]

உலகம் செய்தி

அமைதியை கடைபிடிக்குமாறு பாகிஸ்தான் அவசர வேண்டுகோள்!

  • June 8, 2026
  • 0 Comments

அமைதியை அடைவதற்குரிய இறுதி இலக்கு மிக அருகில் இருப்பதால், அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் மீண்டும் போர் மூண்ட நிலையிலேயே , அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் முன்பை விட மிகவும் கடுமையான முறையில் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!

  • June 8, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி இன்று முற்பகல் வல்வெட்டித்துறைச் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தின்போது பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை, நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேரில் அழைத்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருந்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து விடைபெறும் சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநருடன் அவசர சந்திப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (08) காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் தூதுவர் இதன்போது […]