சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் சுரேஷ் சலே!
குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் உதய கம்மன்பில மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். தடுப்புக்காவலில் தமக்கு இழைக்கப்படும் அநாகரிகமான, சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று இரவு முதல் சுரேஷ் சாலே உணவு, நீர் மற்றும் மருந்துகளை முற்றாக மறுத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். […]











