ஆஸ்திரேலியா செய்தி

“போர் தாக்கம் தொடரும்: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துக”

  • April 1, 2026
  • 0 Comments

பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் நாட்டு மக்களிடையே இன்று (01) உரையாற்றினார். இந்தப் பொருளாதார நெருக்கடியானது வரும் மாதங்களிலும் தொடரும் என்பதால், பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க அரசு எடுத்துள்ள பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை கோரினார் ஈரான் ஜனாதிபதி: ட்ரம்ப் தகவல்!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய தலைமை முந்தைய ஆட்சியாளர்களை விட அதிக அறிவுத்திறன் கொண்டதாகவும், தீவிரப்போக்கு குறைந்ததாகவும் இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார். எனினும், ஈரானுக்கு அருகிலுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்யும் வரை இந்த கோரிக்கை ஏற்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஈரான் மீது கடுமையான ராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று […]

இலங்கை செய்தி

கணித, உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

  • April 1, 2026
  • 0 Comments

வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் மாவட்ட மட்டத்தில் கணித மற்றும் உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். கணிதப் பிரிவில் அனுராகந்தன் விஸ்வகாந்தன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். அதேவேளை உயிரியல் பிரிவில் சந்திரபாலா கதுசன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 20 […]

இலங்கை செய்தி

யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 A சித்தி!

  • April 1, 2026
  • 0 Comments

வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். கணிதப் பிரிவில் 42 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 16 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும், 6 மாணவர்கள் ஏ, 2 பி சித்திகளையும் பெற்றுள்ளனர். உயிரியல் பிரிவில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 12 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும், 8 மாணவர்கள் ஏ, […]

உலகம் செய்தி

நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா?

  • April 1, 2026
  • 0 Comments

நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தீவிரமாக ஆலோசித்துவருகின்றார் என தெரியவருகின்றது. ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும் ட்ரம்ப், அந்த அமைப்பை ஒரு வலிமையற்ற கட்டமைப்பு என்று விமர்சித்துவருகின்றார். குறிப்பாக, ஈரான் மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அமெரிக்காவிற்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா மற்ற நாடுகளுக்குத் தானாகவே முன்வந்து உதவிய போதிலும், நேட்டோ […]

இந்தியா செய்தி

தேயிலை தொழிலாளர்களை கௌரவித்த பிரதமர் மோடி!

  • April 1, 2026
  • 0 Comments

இந்தியா, அசாமின் திப்ருகரில் அமைந்துள்ள தேயிலை தோட்டமொன்றுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அவர் அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், மாநிலத்தின் தேயிலைத் துறைக்கு தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் 9-ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் திகதி நடைபெற உள்ளது. அசாமில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கனபரிஷத், போடோலாந்து மக்கள் […]

விளையாட்டு

IPL – இன்றைய ஆட்டம் தொடர்பான அறிவித்தல்!

  • April 1, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று (31) Lucknow Super Giants – Delhi Capitals அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அக்சர் படேல் தலைமையில் போட்டியில் பங்கேற்கின்றது.

உலகம் செய்தி

ஈரானில் 65 உளவாளிகள் கைது!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரான் மத்திய மார்க்காசி மாகாணத்தில் Markazi province எதிரி நாடுகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் எனக் கூறப்படும் 65 பேர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்கள் பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கிய உளவுப் பிரிவினராகச் செயல்பட்டதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகக் கருதப்படும் நபர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் ஈரான் அரசு அதிகத் தீவிரம் காட்டி வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகள் […]

உலகம் செய்தி

கத்தாரில் எரிபொருள் கப்பல்மீது ஏவுகணைத் தாக்குதல்!

  • April 1, 2026
  • 0 Comments

கத்தார் எனர்ஜி நிறுவனம் வாடகைக்கு எடுத்த “Aqua 1” என்ற எரிபொருள் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் இன்று (01) அதிகாலை கத்தாரின் வடக்கு கடல் எல்லைப் பகுதியில் நிஇடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தினால் கடலில் கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

உலகம் செய்தி

இஸ்ரேலின் இனவெறிச் செயல்: அமெரிக்க செனட்டர் கொதிப்பு!

  • April 1, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு வழங்கப்படும் தடையற்ற நிதி உதவிக்கு அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹொல்லன் Senator Chris Van Hollen தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலிய அரசின் புதிய சட்டத்தை அவர் மிக மோசமான இனவெறி செயல் என்று விமர்சித்துள்ளார். ஒரே குற்றத்திற்காக யூதர்களுக்கு ஒரு நீதியும், பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நீதியும் கடைபிடிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பாரபட்சமான கொள்கைகளைக் கொண்ட ஒரு நாட்டிற்கு அமெரிக்கா […]

error: Content is protected !!