அரச குடும்பத்தின் வரி விவரங்கள் மக்கள் பார்வைக்கு
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிடுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்துள்ளது.
அரச குடும்பத்தின் நிதிநிலைமைகள் பொதுமக்களின் தீவிர ஆய்வுக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் மன்னர்கள் சட்டப்படி சில வரிகளைச் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றிருந்தாலும், பல தசாப்தங்களாக அவர்கள் சில வரிகளைத் தாமாக முன்வந்து செலுத்தி வருகின்றனர்.
அதேநேரம் தங்கள் வரி விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இல்லை.
ஆனால், அவப்பெயர் பெற்ற முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவைச் சுற்றியுள்ள சமீபத்திய சர்ச்சைகள், அரச குடும்பத்தின் நிதிநிலைமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
இதற்கமைய தனது தனிப்பட்ட வரித் தகவல்களைப் பகிரும் முதல் மன்னராக சார்லஸ் திகழ்வார் என பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.




