கொழும்பிலிருந்து , பதுளை நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸொன்று, இன்று (27) அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. இலங்கை செய்தி

பதுளையில் பஸ் விபத்து – 42 பேர் காயம்

  • June 27, 2026
  • 0 Comments

பதுளை, தியத்தலாவை பகுதியில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எவரது நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பிலிருந்து , பதுளை நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸொன்று, இன்று (27) அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சோமாலிய பிரஜைகளுக்கு இனி 'மல்டிபிள்-என்ட்ரி' (Multiple-entry) விசாக்கள் வழங்கப்பட மாட்டாது. ஐரோப்பா செய்தி

சோமாலிய பிரஜைகளுக்கு விசா கட்டுப்பாடு: EU அதிரடி முடிவு

  • June 26, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தால் சோமாலியர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சோமாலியர்களை மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துக்கொள்ள அந்நாட்டு அரசு மறுத்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சோமாலிய ஜனாதிபதி, தமது நாட்டு மக்களை ஏற்கத் தயார் எனவும், மொழி தெரியாத ஏனைய நாட்டு நபர்களை சோமாலியர்கள் எனக் கருதி திருப்பி அனுப்புவதையே எதிர்ப்பதாகவும் விளக்கமளித்துள்ளார். 1991 இல் மத்திய அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் 2006 […]

ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

ஆகஸ்ட் 28 திரைக்கு வருகிறது “கராத்தே பாபு”

  • June 26, 2026
  • 0 Comments

நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் ” சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பான அரசியல் திரில்லரான கராத்தே பாபு படம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் […]

அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. உலகம் செய்தி

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – வெனிசுலாவில் சர்வதேச மீட்புக்குழுக்கள்

  • June 26, 2026
  • 0 Comments

வெனிசுலாவைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் அவசரப் பணிகளில் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. இந்த நிலநடுக்க பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் […]

காசா மற்றும் லெபனானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த மனக்கசப்பு சர்வதேச அளவில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. உலகம் செய்தி

டிரம்ப்-நெதன்யாகு உறவில் விரிசலா?

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இடையிலான உறவு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழ்பெற்ற பத்திரிகையாளர்களான மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் இணைந்து எழுதியுள்ள புதிய புத்தகம், இரு தலைவர்களுக்கும் இடையிலான பதட்டங்களை விவரிக்கிறது. செப்டம்பர் 2025-இல் ஐ.நா பொதுச் சபையின் கூட்டத்தின் இடையே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில், காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப், நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்தார். “எல்லோரும் உன்னால் சோர்வடைந்துவிட்டார்கள், யூதர்களும் […]

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதன்முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வரி விவரங்களை வெளியிட்டுள்ளார் . 2024-25 நிதியாண்டில் மன்னர் 12.9 மில்லியன் பவுண்டுகள் வரியாகச் செலுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

வரலாற்றில் முதன்முறையாக வரி விவரங்களை வெளியிட்ட பிரித்தானிய மன்னர்

  • June 26, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதன்முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வரி விவரங்களை வெளியிட்டுள்ளார் . 2024-25 நிதியாண்டில் மன்னர் 12.9 மில்லியன் பவுண்டுகள் வரியாகச் செலுத்தியுள்ளார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளர் தனது வரி விவரங்களை இந்த வழியில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். செலுத்தப்பட்ட வரியின் அளவை ஆராயும்போது, ​​இங்கிலாந்தில் அதிக வரி செலுத்துபவர்களில் மன்னர் சார்லஸும் ஒருவர். வேல்ஸ் இளவரசர் வில்லியம், அதே காலகட்டத்தில் 7.76 மில்லியன் பவுண்டுகள் வரி […]

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இலங்கை செய்தி

ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கையிலிருந்து ராணுவம்

  • June 26, 2026
  • 0 Comments

ஐ.நா. அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் கலந்துகொண்டார். ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எங்கு […]

கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

பாதாள குழுவுடன் உறவு: கட்சி உறுப்பினரை நீக்கியது சஜித் அணி

  • June 26, 2026
  • 0 Comments

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது. கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். “2023 ஆம் ஆண்டளவில் அபேசிங்க கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ செயற்படவில்லை.” என்று SJP செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் […]

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் கைது

  • June 26, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குச்சவெளி மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடத்தக்கது. இவர், லஞ்ச ஊழல் ஆணை குழுவினால் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

பெரிய திட்டமிடல்கள் இன்றி, மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு திடீர் தாக்குதல்களை அவர்கள் நடத்துவதால், இவர்களைக் கண்காணிப்பது அல்-கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் (ISIL) அமைப்புகளைக் கண்காணிப்பதை விட மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானால் ஆபத்து: உளவுப் பிரிவு எச்சரிக்கை

  • June 26, 2026
  • 0 Comments

உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும்சூழ்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற குகுழுவொன்று, ஆஸ்திரேலிய மண்ணில் தீவைப்பு, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் படுகொலைகளைக் கூட நிகழ்த்தக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ASIO-வின் தலைமை இயக்குநர் மைக் பர்கெஸ் (Mike Burgess) எச்சரித்துள்ளார். தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புச் சூழல் சிதைவடைந்து வருவதாகவும் உளவுத்துறை பிரதான சுட்டிக்காட்டியுள்ளார். சிட்னி Bondi Beach பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பெர்த்தில் […]