முதலீட்டு திட்டங்களுக்கு எதிர்ப்பு – டொரெண்டோவில் மக்கள் பேரணி
கனடா பிரதமர் மார்க் கார்னி நடத்திய முதலீட்டு உச்சி மாநாட்டிற்கு எதிராக, டொரெண்டோ நகரின் மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
புதைபடிவ எரிபொருள் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தல், இராணுவ உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பொதுச் சொத்துக்களின் மீதான அதிகக் கட்டுப்பாட்டைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்களை எதிர்ப்பதாகப் போராட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர், புலம்பெயர்ந்தோர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதிக் குழுக்கள் கலந்துகொண்டன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டின் ஏற்றுமதிகள் மீது விதித்துள்ள வரிகளை எதிர்த்து பிரதமர் கார்னி பல்வேறு முதலீட்டுகளை ஈர்க்க போராடி வருகின்றார்.
இதற்கு கனேடியர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.




