குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்

  • July 9, 2026
  • 0 Comments

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள செயற்கைக்கோள் அமைப்பு (Satellite antenna early warning system) மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் ஆகியவையே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது. அதேவேளை, கடந்த 48 மணிநேரத்துக்குள் […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

நேட்டோ செயலர் மற்றும் ஐரோப்பிய நாடுகள்மீது ஈரான் கடும் விசனம்

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் Mark Rutte தெரிவித்த கருத்துக்களை ,ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், இப்போரில் ஐரோப்பிய நாடுகள் உடந்தையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரில் ஐரோப்பாவின் திட்டமிட்ட உடந்தையை மார்க் ருட்டே மீண்டும் மீண்டும் ஒப்புக்கொண்டிருப்பது, இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் அவர்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது,” என்று பகாய் […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இந்திய பிரஜை பலி

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ நாளிதழுக்கு உறுதிப்படுத்தியுள்ளன என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பலியானவர் 73 வயதுடைய உன்னிகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சிறைச்சாலை வரலாற்றிலேயே மிக கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இக்கலவரத்தில், படுகாயமடைந்திருந்த மேலும் ஒரு சிறை அதிகாரி புதன்கிழமை (ஜூலை 08, 2026) உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெல்பர்ன் நகரை சென்றடைந்துள்ளார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

ஆஸ்திரேலியாவில் மோடிக்கு அமோக வரவேற்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெல்பர்ன் நகரை சென்றடைந்துள்ளார். அந்நகரிலுள்ள டாக் lands மைதானத்தில் (Docklands Stadium) இந்தியப் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. “மெல்பர்ன் மீட்ஸ் மோடி” (Melbourne Meets Modi) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நிகழ்வில் 20,000-க்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என அமைப்பாளர்கள் கணித்துள்ளனர். அதேவேளையில், இந்தியாவில் மனித உரிமைகள் நிலை […]

செய்தி விளையாட்டு

மொராக்கோ அணிக்கு பின்னடைவு: நட்சத்திர வீரருக்கு காயம்

  • July 9, 2026
  • 0 Comments

பிரான்ஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்கான மொராக்கோ அணியின் திட்டங்களுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர முன்கள வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismael Saibari) இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா அணிக்கு எதிரான ‘லாஸ்ட்-16’ (சுற்று-16) சுற்று ஆட்டத்தின் போது சைபாரிக்கு தொடை தசைநார் (Hamstring) காயம் ஏற்பட்டது. இந்த முக்கிய நாக்-அவுட் போட்டிக்கு முன்னதாக அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்று அணியின் பயிற்சியாளர் முகமது […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பிலிருந்து பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 வெளிநாட்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர். சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது. மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை […]

ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. உலகம் செய்தி

தாக்குதல்கள் உக்கிரம் – எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, இரு முக்கிய கச்சா எண்ணெய் குறியீடுகளும் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் நிலைபெற்றன. புதன்கிழமை வர்த்தக அமர்வின் முடிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 5%-க்கும் மேல் உயர்ந்து $78.02 ஆக நிலைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த […]

அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் Mohammad Bagher Ghalibaf எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பொறுமை இழந்தது ஈரான் – பொங்கி எழுந்து எச்சரிக்கை

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் Mohammad Bagher Ghalibaf எச்சரிக்கை விடுத்துள்ளார். மூலோபாய ரீதியாக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதி ஈரானின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே இயங்கும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வீணான மிரட்டல்கள் அமெரிக்காவை மேலும் சிக்கலில் தள்ளும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரான்மீது அமெரிக்கா இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலேயே, இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர் நியமனம் இலங்கை செய்தி

கிழக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்

  • July 8, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குமாரசிங்கம் குணநாதன் , கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், குச்சவெளி, வெருகல் மற்றும் மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

ஈரான் மீது புதன்கிழமையான இன்று இரவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரான்மீது இன்றிரவும் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • July 8, 2026
  • 0 Comments

ஈரான் மீது புதன்கிழமையான இன்று இரவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில். கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, டிரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுள்ள ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினார். இதன்போது இது பற்றி கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “கடந்த இரவில் நாம் அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம். இன்று இரவும் அவர்கள் […]