ஆஸ்திரேலியா செய்தி

எரிசக்தி பாதுகாப்பு ஏற்பாடு: சிங்கப்பூர் பறக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர்!

  • April 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese இரு நாள் பயணமாக நாளை மறுதினம் (9) சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கின்றார். சிங்கப்பூர் பிரதமர் உட்பட அந்நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடன் அவர் பேச்சு நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான மூலோபாய உறவை மேம்படுத்துவது குறித்தும் தடையற்ற எரிபொருள் வர்த்தகத்தை உறுதி செய்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு […]

உலகம் செய்தி

ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி operation epic fury ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள தரவு பட்டியலில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி ராணுவ நடவடிக்கையில் ஈரானுக்குரிய 155-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் சிதைக்கப்பட்டோ அல்லது முழுமையாக அழிக்கப்பட்டோ உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது அதிநவீன F-35 போர் விமானங்கள், B-52 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் […]

உலகம் செய்தி

ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் ட்ரம்ப்: நியூசிலாந்து பிரதமர் கடும் கண்டனம்!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானின் பொதுமக்கள் கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவது தேவையற்றது மற்றும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon சுட்டிக்காட்டியுள்ளார். பாலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். தற்போதைய சூழலில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, மோதல்கள் பரவாமல் தடுப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணை மீள திறப்பு, உடன்பாட்டுக்கு வருதல் உள்ளிட்ட விடயங்களுக்கு ஈரான் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சி: ஜப்பானும் களத்தில்!

  • April 7, 2026
  • 0 Comments

ஜப்பான் பிரதமர் Sanae Takaichi மற்றும் ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடலுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் பேச்சு நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இதற்கமையவே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானியர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே ஜப்பான் இந்த ராஜதந்திர முயற்சியில் இறங்கியுள்ளது. பதற்றமான சூழலை விரைவாகக் குறைப்பதன் அவசியத்தை ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் […]

இந்தியா

ஈரான் மக்களுக்காக நடத்தப்பட்ட ஏலம்: 1 முட்டை 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை!

  • April 7, 2026
  • 0 Comments

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் முட்டையொன்று இந்திய நாணய பெறுமதியின் 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா, லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்திலேயே குறித்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது. அஞ்சுமன் இமாமியா லே மற்றும் மஜ்லிஸ்-ஏ-உலமா லே உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகள் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றன. இதற்கமைய நடைபெற்ற ஒரு ஏலத்தில் முட்டையொன்று 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையானது. அந்த முட்டையை ஏலத்தில் வாங்கிய ஷபீர் உசேன், அது தொடர்பில் கருத்து […]

பொழுதுபோக்கு

ராஜஸ்தான், மும்பை அணிகள் இன்று மோதல்!

  • April 7, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (07) நடைபெறும் 13 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals மற்றும் மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians ஆகிய அணிகள் மோதவுள்ளன. ACA மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். நேற்றைய ஆட்டம் ரத்து அதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Kolkata Knight Riders மற்றும் பஞ்சாப் கிங்ஸ் Punjab Kings அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி விடாது பெய்த கனமழை காரணமாக இரத்து […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம்: ஆஸ்திரேலிய படை அதிகாரி கைது!

  • April 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் Australian Defence Force (ADF) முன்னாள் வீரர் ஒருவர் சிட்னி விமான நிலையத்தில் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் 2005 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடத்தாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையின் ஓர் அங்கமாகவே இக்கைது இடம்பெற்றுள்ளது. 47 வயதான Ben Roberts-Smith என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை மற்றும் சிறப்பு விசாரணை அலுவலகத்தின் கூட்டு நடவடிக்கையின் பிரகாரம் அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் […]

உலகம் செய்தி

ஈரானில் மூன்று விமான நிலையங்கள்மீது தாக்குதல்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளிலுள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக Bahram, Mehrabad மற்றும் Azmayesh ஆகிய மூன்று விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய சில இலக்குகள்மீதும் பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை அழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, பொது மக்களின் இருப்பிடம் உட்பட சிவில் இலக்குகளை இஸ்ரேல் குறிவைப்பதாக […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தவறான குறிவைப்பு: அரசியல் தலைவர் பலி!

  • April 6, 2026
  • 0 Comments

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் எனக் கருதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அரசியல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட் அருகே உள்ள குடியிருப்பொன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எதிர்க்கும் The Lebanese Forces Party கட்சியைச் சேர்ந்த பியர் முவாத் Pierre Mouawad என்பவரே கொல்லப்பட்டுள்ளார். அவரது மனைவியும் இத்தாக்குதலில் பலியாகியுள்ளார். குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், தங்களது இலக்கு தவறிவிட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 9 ஆம் திகதி சபையில் விவாதம்!

  • April 6, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (09) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் இந்த வாரம் மூன்று நாள்களுக்குக் கூடவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவது தொடர்பாக […]

error: Content is protected !!