உலகம்

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள எட்டு அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளை  கூட்டு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலம் அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க இராணுவத்தின் இரண்டாவது அலைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாஷிங்டன் மீறியதாகக் ஈரான் […]

இலங்கை செய்தி

குவைத்தில் போதைப்பொருட்களுடன் 03 இலங்கையர் கைது!

  • June 11, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பாக 03 இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட ஏழுபேர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு சோதனையின் போது இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குழுவில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் குடிமக்கள், ஒரு இந்தியர் மற்றும் இரண்டு பிற வெளிநாட்டினர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஷிஷ், ஹெராயின் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக […]

உலகம்

கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது அதிரடி தாக்குதல்

  • March 31, 2026
  • 0 Comments

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் குறித்த கப்பல் முழுமையாக எண்ணெயால் நிரப்பப்பட்டிருந்ததனால், கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம்

குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது அதிரடி தாக்குதல்

  • March 25, 2026
  • 0 Comments

குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் விமான நிலையத்தின் எரிபொருள் தாங்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கிய பிறகு குவைத் சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் சர்வதேச விமான  நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் போர் தொடங்கிய காலத்திலிருந்தே இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குவைத்திற்கு வர வேண்டிய அனைத்து விமானங்களும் சவுதி அரேபியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.