துனியாவில் ஜனாதிபதிக்கு எதிராக அணித்திரண்ட மக்கள் – பதவி விலக வலியுறுத்தல்
துனியாவில் ஜனாதிபதியான கைஸ் சயீத் (Kais Saied) உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள், ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் அரசாங்கத்தின் திறமையற்ற பொருளாதார மேலாண்மை ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற மிகப்பெரிய பொதுப் போராட்டமாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி அவசரகால அதிகாரங்களைக் கைப்பற்றியதிலிருந்து அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்யுமாறும் […]



