யாழில் வீடு புகுந்து கொள்ளையடித்த சிறுவர்கள் : ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மாயம்!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், குறித்த இருவரும் வீட்டின் புகைக்கூட்டின் வழியாக உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அத்துடன் பணத்தை பார்த்தவுடன், நெடுங்கேணியில் […]













