மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி!
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை பயணிக்கும் ‘யாழ் தேவி’ கடுகதி ரயில் சேவை நாளை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலில் நான்கு முதலாம் வகுப்பு பெட்டிகள் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆசனங்களை பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும்.
ரயில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.





