உலகம்

 இந்தோனேசியாவில் இலவச உணவு விநியோகத்தில் ஊழல்: 08 கோடி குழந்தைகள் பாதிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஊட்டச்சத்து திட்டங்களின் கீழ் தினமும் 08 கோடி குழந்தைகளுக்கு உணவளிப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி சந்கேத்திற்கு இடமின்றி மீறப்பட்டுள்ளதும், இந்த திட்டத்தின் கீழ் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுகளை உட்கொண்ட பெரும்பாலான குழந்தைகள் சுகவீனம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய ஊட்டச்சத்து முகமையின் தலைவர் டாடான் ஹிண்டயானா (Dadan Hindayana) அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொண்டதன் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதே குற்றச்சாட்டுகளின் […]

உலகம்

இந்தோனேசியாவில் குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து – 300 குடும்பங்கள் பாதிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நேற்று இரவு குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெரிசலாக காணப்படும் அந்த பகுதியில் 250 வீடுகள் தீயில் எரிந்து அழிந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு வசித்து வந்த 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் இந்தோனேசிய தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய ஜகார்த்தா பெருநகர துணை மண்டல காவல்துறை, மக்களை வெளியேற்றவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் […]

உலகம்

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட படகு விபத்து – 14 பேர் மாயம்!!

  • May 13, 2026
  • 0 Comments

இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் மாயமாகியுள்ளதாக மலேசிய கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேராக்  (Perak ) மாநிலத்தில் உள்ள பாங்கோர் (Pangkor) தீவுக்கு அருகே நேற்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஏழு பெண்கள் உட்பட 23 இந்தோனேசியர்கள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இணைந்து மீட்டதாக  மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மே 9 அன்று இந்தோனேசியாவின் கிசரானில் (Kisaran) இருந்து புறப்பட்டது […]

உலகம்

இந்தோனேசியாவில் ரயில் விபத்து; 14 பேர் பலி

  • April 28, 2026
  • 0 Comments

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் படுகாயமடைந்த 80 இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கும் பணியும் நடைபெற்றுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

உலகம் செய்தி

லெபனானில் காயமடைந்த இந்தோனேசிய அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

  • April 24, 2026
  • 0 Comments

லெபனானில் பணியாற்றி வந்த  யூனிஃபில் அமைதிப்படையில் சேர்ந்த இந்தோனேசிய வீரர் ஒருவர், கடந்த மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யூனிஃபில் வெளியிட்ட தகவலின்படி, Riko Pramudia என்ற கார்ப்பரல் (Corporal), மார்ச் 29ஆம் திகதி இரவு அட்சித் அல் குசைர் பகுதியில் உள்ள தளத்தில் ஏற்பட்ட எறிபொருள் வெடிப்பில் கடுமையாக காயமடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளை கடைப்பிடித்து, ஐ.நா. பணியாளர்கள் […]

உலகம்

இந்தோனேசியாவில் வலுவான நிலநடுக்கம் பதிவு!

  • October 19, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் பப்புவா (Papua) மாகாணத்தில் இன்று  வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் செரம்பன் (Seremban) மாவட்டத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை, மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.