இந்தோனேசியாவில் குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து – 300 குடும்பங்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நேற்று இரவு குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெரிசலாக காணப்படும் அந்த பகுதியில் 250 வீடுகள் தீயில் எரிந்து அழிந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அங்கு வசித்து வந்த 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் இந்தோனேசிய தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய ஜகார்த்தா பெருநகர துணை மண்டல காவல்துறை, மக்களை வெளியேற்றவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் 200 அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியுள்ளது.
மேலும் தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




