திறைசேரி நிதி மோசடி: FBI உதவியை நாடியது இலங்கை?
திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலங்கை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை புலனாய்வாளர்கள், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் FBI உதவியை நாடியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் ஊடுருவல் தாக்குதல்களைக் கண்டறிந்து தணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இணையப் பாதுகாப்பு நிறுவனத்தையும் இலங்கை விசாரணைப் பிரிவு தொடர்பு கொண்டுள்ளது. மோசடி மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தன, திறைசேரியிலிருந்து மோசடியாகத் திசை திருப்பப்பட்ட நிதி எங்கே உள்ளது, இந்த மோசடிக்குப் […]













