இலங்கை செய்தி

திறைசேரி செயலாளர் ராஜினாமா? அரசு கூறுவது என்ன?

திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம், இணைய உடுருவிகளால் திருடப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.

குறிப்பாக திறைசேரி செயலாளரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையிலேயே தேசிய மக்களின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அமைச்சரவைக்குள் இருந்து கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சர்ச்சைக்குரிய நிலக்கரி மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளித்து அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் அண்மையில் பதவி விலகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!