ஈரானில் இறுக்கமடையும் பாதுகாப்புக் கட்டுப்பாடு: 56 பேருக்கு மரண தண்டனை
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும் மதப் பொலிஸாரும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கட்டாய ஹிஜாப் ஆடைக்கட்டுப்பாடு, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடைகள் மற்றும் அரசுக்கு எதிர்ப்பாகக் கருதப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக “உள்நாட்டு ஒற்றுமையை” பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஈரான் அதிகாரிகள் […]













